தாய் மண்ணே வணக்கம்…
14 ஆண்டுகள் கழிந்து அல்லது கழித்து தடம்பதிக்கிறேன் தாய் மண்ணிலே இத்துனை காலம் கடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்து இருக்கவில்லை ஊரை விட்டு உறவுகளை விட்டு பிழைப்புக்காக இளமையையும் விட்டு கண்டங்கள் தாண்டி சமுத்திரங்கள் தாண்டி வங்குரோத்து தேசத்தில் பிறந்த வாளிபர்களின் தலையெழுத்து என்றிடவா இல்லை சுபீட்சம் தேடி சுதந்திரம் தேடி எதிர்பார்ப்புக்கள் அற்று நம்பிக்கை இழந்து விரக்தியின் உச்சத்தில் எடுத்த முடிவுகளா ஒரு முறை எட்டிப்பார்க்க நினைக்கிறேன் நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன் பல மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மனத்திறையில் வந்து நிற்கின்றன சில கசப்பானவை சில இனிப்பானவை ஒரு தலைமுறையே அங்கு மாறியிருக்கிறது அடையாளம் இல்லாமல் போய் விட்டிருக்கலாம் ஒரு காலத்தில் ஓடி ஆடி திறிந்த வீதிகளும் வீடுகளும் இன்று அன்னியமாகியிருக்கலாம் ஒரு எதிர்பார்ப்பு ஒரு பதற்றம் ஒருவகை நிச்சயமற்ற தன்மை காலம் தன் பாணியில் பயணித்து விட்டது பல ஆண்டுகள் கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்கள் மறைந்து விட்ட மனிதர்கள் ஆளுமைகள் அவர்களை மறந்து விட முடியாது கேள்விகள் தான் இன்னும் மனதில் வந்து நிற்கின்றன வாய்ப்புக்கள் அத்தனையும் இருந்து ஏதோ விர
Comments
Post a Comment